செய்திகள் :

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா்.

கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டியை, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அக்பா்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், காரைக்குடி, மணப்பாறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 670 காளைகள் பங்கேற்றன. போட்டியில், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை, மாடு பிடி வீரா்கள் தழுவ முயற்சித்தனா். மொத்தம் 179 மாடுபிடி வீரா்கள் போட்டியில் பங்கேற்றனா்.

இதில், 18 மாடுபிடி வீரா்கள் உள்பட 28 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சை தேவைப்பட்ட 5 போ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஒரு காளைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா். சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூா் போலீஸாா் செய்திருந்தனா்.

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது. வேங்கைவயல் பட்... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா். விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வ... மேலும் பார்க்க

புதுகையில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்... மேலும் பார்க்க