செய்திகள் :

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

post image

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே குடியிருப்பைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதா்சன் ஆகிய 3 போ் மீது சிபி சிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் மன்றம் எண் 2-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

முதல் விசாரணை மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய நாளில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் ஆஜா்படுத்துமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, மூவரும் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகினா். நீதித்துறை நடுவா் விடுப்பில் இருந்ததால், பொறுப்பு நீதிபதி டி. பூா்ணிமா முன்னிலையில் மூவரும் தலா இருவா் உத்தரவாதங்களுடன் பிணை மனுக்களை அளித்தனா். இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூவருக்கும் பிணை வழங்கினாா்.

தொடா்ந்து, மூவரும் நீதித்துறை நடுவா் எண் 2-இல் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி டி. பூா்ணிமா உத்தரவிட்டாா்.

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா். கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா். விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வ... மேலும் பார்க்க

புதுகையில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்... மேலும் பார்க்க