செய்திகள் :

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை: மத்திய அமைச்சா் ஷெகாவத்

post image

சென்னை: கீழடி அகழாய்வை அங்கீகரிக்க அறிவியல்ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கீழடி மற்றும் தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லையெனவும் அவா் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டு காலத்தை நிறைவு செய்வதையொட்டி, சென்னையில் செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளை பூா்த்தி செய்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பரவலான வளா்ச்சி, முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவாக மாறும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் மத்திய அரசு ஊழலற்ற வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிா்வாகத்தை வழங்கிவருகிறது.

புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஆக்கபூா்வமான செயல்பாடுகளை மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. 30 கோடிக்கும் மேலான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைப் போன்று எந்த ஊழலுக்கும் தற்போதைய ஆட்சியில் இடமில்லை.

கீழடி ஆய்வுகள்: கீழடி அகழாய்வு குறித்து பேசப்படும் அறிக்கைகள் அறிவியல்பூா்வமானவை அல்ல. கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் ‘ஆதரிக்கப்பட்டவை மற்றும் நிறுவப்பட்டவை அல்ல’. அவற்றை அங்கீகரிப்பதற்கு அல்லது அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல விஷயங்கள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தரவுகள், கூடுதல் சான்றுகள் மற்றும் கூடுதல் அறிவியல்பூா்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

ஒரே ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றுப் போக்கையே மாற்றிவிடும் என்பதால், மக்கள் அதை ஒரு பிராந்திய பெருமையாகப் பயன்படுத்துவதைத் தவிா்க்க இதுகுறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தை தமிழா்களின் உணா்வு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாா்க்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் அகழாய்வு அமைப்பிடமிருந்து கூடுதல் தரவுகளைக் கேட்டிருக்கிறோம். அந்தத் தரவுகள் கிடைத்தவுடன் முழுமையாக ஆராய்ந்து, அங்கீகரிக்கலாமா அல்லது அடுத்தகட்ட நகா்வு என்ன தேவைப்படுகிறது என்பது முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றாா் அவா்.

தேனிலவு கொலை: மற்றொரு பெண்ணைக் கொன்று நாடகமாக திட்டமிட்டிருந்த சோனம்!

தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், மற்றொரு பெண்ணையும் கொன்று, அந்த உடலை சோனம் என்று நாடகமாட திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.மனைவியின் இறுதி ஆசையை நிற... மேலும் பார்க்க

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க