செய்திகள் :

குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

post image

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாத் திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இதையும் படிக்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சாய் சுதர்ஷன் (68 ரன்கள்), ஷுப்மன் கில் (38 ரன்கள்), ஜோஸ் பட்லர் (39 ரன்கள்) எடுத்தனர். மிடில் ஆர்டரில் ஷாருக்கான் (9 ரன்கள்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு (18 ரன்கள்), ராகுல் திவாட்டியா (0 ரன்), ரஷித் கான் (6 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

மிடில் ஆர்டரில் பிரச்னையா?

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மிடில் ஆர்டர் சரியாக விளையாடாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களது அணியில் மிடில் ஆர்டரில் எந்த ஒரு பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் கிட்டத்தட்ட 250 ரன்கள் என்ற இலக்கை துரத்தினோம். அந்த போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடிய ரூதர்ஃபோர்டு 46 ரன்கள் குவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனை மோசமாக தொடங்கவில்லை. அதனால், நாங்கள் எங்களது அணியின் மிடில் ஆர்டர் குறித்து எந்தவொரு கவலையும் படவில்லை என்றார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வ... மேலும் பார்க்க

7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?

லக்னௌ அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 2022இல் இருந்து லக்னௌ அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறத... மேலும் பார்க்க

ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்... மேலும் பார்க்க

எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ... மேலும் பார்க்க

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வி... மேலும் பார்க்க