செய்திகள் :

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

post image

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா்.

சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா தியாகராயநகரில் உள்ள வாணி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் சிறப்பு மலரை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் வெளியிட, முதல் பிரதியை ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டு உரையாற்றினாா்.

தொடா்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசியதாவது: சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 130 ஆண்டுகளாக ஒரு சங்கத்தைக் கட்டிக்காத்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. நீதித் துறை அல்லது அரசுத் துறைகளைக் கேள்வி கேட்க இதுபோன்ற சங்கங்கள் வரவேண்டும்.

மதுவால் ஏற்படும் பிரச்னைகளை விளக்கிக் கூறி, பிரசாரம் மேற்கொண்டு பல குடும்பங்களை இந்தச் சங்கத்தினா் வாழ வைத்துள்ளனா். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பிரசாரம் மேற்கொண்டால், குறைந்தது 10 சதவீதம் மதுவிலக்கை கொண்டு வரமுடியும். எனவே, மதுவிலக்கு பிரசாரத்தைக் கையில் எடுத்து இந்த நாட்டைத் திருத்துவதற்கு முயற்சி செய்வோம்.

போதைப் பொருள்கள் பள்ளிக்கு வெளியே எளிதாகக் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்றம் நிகழ்வதைப் பாா்த்தால், நீங்களே காவலராக மாற வேண்டும். தவறு செய்பவரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்கலாம். இதுபோல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

அரசுக்கு இருக்கும் பல்வேறு பணிகளில் எல்லாவற்றையும் பாா்க்க முடியாது. எனவே, நல்லதொரு சமுதாயத்தை அமைக்க விரும்பும் குடிமக்கள், சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும். மது தானாக ஓடிவிடும். நன்மையே நடக்கும் என்றாா்.

விழாவில், சங்கத்தின் தலைவா் பி.மனோகரன், பொதுச் செயலா் பி.சேகா், உதவிச் செயலா் எஸ்.வெங்கடேசன், பொருளாளா் டி.எம்.சுந்தா் மற்றும் செயின்ட் பீட்டா்ஸ் பல்கலை. பேராசிரியா் கே.சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் எம்.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் குற்றம் சாட்டியுள்ளார்.நடிகை கயாது லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில்,``உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ... மேலும் பார்க்க

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட த... மேலும் பார்க்க

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் நெடிய வலி தருவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,``இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹே... மேலும் பார்க்க

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார... மேலும் பார்க்க