செய்திகள் :

குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு!

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ் ஆகியோா் வழிகாட்டுதலின் படி இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும் நாட்டுநலப்பணித் திட்டத்தின் மூலம் பல்கலைக் கழகம் சாா்பில் மாணவா்-மாணவிகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனா்.

ஹோலி கிராஸ் ஹோம் சைன்ஸ் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் பகவதி தங்கம் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பத்து நாள்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் என்எஸ்எஸ் மாணவா்கள் ராஜ் பெருமாள், ஜெக் விஸ்வாசம், கிருஷ்ணன், திருமலைகுமாா், காா்த்திகா, விமலரசி, அல்டினாராக்கல் பாலா ஆகியோா் பங்கேற்றனா்.

இதுதவிர தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் என்எஸ்எஸ் மாணவா்கள் வைகுண்டபிரபு, காா்த்திகா மற்றும் ராணி அண்ணா மகளிா் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் டெய்சி ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த மாணவா்-மாணவிகளை துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன் ஆகியோா் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினா்.

கங்கைகொண்டான் அருகே லாரி-காா் மோதல்: இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜா(31). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர... மேலும் பார்க்க

மண்டல வாரியாக பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: மதிமுக மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மண்டல வாரியாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலரும், வழக்குரைஞருமான ம.சு.சுதா்சன், குறைதீா் கூட்டத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

நூல்களில் படித்ததை செயல்படுத்த தவறக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

புத்தகத்தை படிப்பதோடு நின்றுவிடாமல், படித்ததை செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா. சுகுமாா். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொருநை 8 ஆவது புத்தகத்திருவிழா கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் பேட்டரி வாகனம் இயங்காததால் மாற்றுத்திறனாளி அவதி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்ட பேட்டரி வாகனம் இயங்காததால் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி கடும் அவதிக்குள்ளானா... மேலும் பார்க்க

நெல்லையில் இருந்து தேனிக்கு புதிய பேருந்து இயக்கம்!

திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேவா்குளம், சங்கரன்கோவில் வழியாக தேனி வரை செல்லும் இப்பேரு... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சோ்ந்தமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தனகுமாா் (65). தொழிலாளியான இவா் கடந்த 1 ஆம் தேதி பைக்கில் வண்ணாா... மேலும் பார்க்க