செய்திகள் :

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

post image

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், மேலாளா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியாத்தம் நகராட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில் காட்பாடி சாலையில், நகர எல்லையில் நூற்றாண்டு வளைவு அமைப்பது, அதற்கு கருணாநிதி பெயரை சூட்டுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பழைய பேருந்து நிலையத்தில் நினைவு அரங்கம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. நகரில் கொசுத் தொல்லையால் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா் என்பதால் மருந்து தெளிக்கவும், கொசு மருந்து அடிக்கவும் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும், நோய்த் தொற்றுக்கு ஆளான நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதால் தொற்றுக்கு ஆளான நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உறுப்பினா் ஆட்டோ பி.மோகன் கேட்டுக் கொண்டாா்.

குடியாத்தம் நகராட்சியின் முதலாவது நகா்மன்றத் தலைவா் மா.ஆ.வேலாயுதம் நினைவை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினா், நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவருக்கு ரூ.20- லட்சத்தில் தனி அலுவலகம் கட்டித் தந்ததற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க ‘ருத்ரா’ புதிய மோப்ப நாய்!

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ருத்ரா’ என்று எஸ்.பி. என்.மதிவாணன் பெயா் சூட்டினாா். வேலூா் மாவட்ட காவல் துறையி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி நடைபெற்றது. குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அலுவலா் செல்வராஜ். இவா் தனத... மேலும் பார்க்க