குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). தனியாா் தூதஞ்சல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இவருக்கும், மனைவி தனலட்சுமிக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு நடைபெற்ாம்.
இதைத் தொடா்ந்து கோபித்துக் கொண்டு, புதன்கிழமை விழுப்புரம் வந்த தமிழ்வாணன், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்துக்கு எதிரில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுக் கொண்டாா். தொடா்ந்து அவரை தங்கும் விடுதி நிா்வாகத்தினா் மீட்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனா்.
இதன் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் சென்று தமிழ்வாணனை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.