செய்திகள் :

குன்னூர்: வீட்டிற்குள் நுழையும் குரங்குகள், அறவே தவிர்க்க அறிவுறுத்தும் வனத்துறை - காரணம் இதுதான்!

post image

நீலகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் குரங்குகளின் நடமாட்டம் இயல்பு தான் என்றாலும், அண்மை காலமாக குடியிருப்புகளைச் சுற்றியும், சாலையோரங்களையும் குரங்குகள் தங்களின் நிரந்தர வாழ்விடமாக மாற்றும் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் வீசிச் செல்லும் திண்பண்டக் கழிவுகள் மற்றும் கிராமங்களில் கொட்டப்படும் உணவு கழிவுகளுக்குக் காத்துக் கிடக்கும் அவல நிலையும் இயல்பாகி வருவது கூடுதல் வேதனை. குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என வனத்துறை வலியுறுத்தியும் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

வீட்டிற்குள் நுழையும் குரங்குகள்

குன்னூர் அருகில் உள்ள புதுக்காடு பழங்குடியினர் கிராமத்தில் குரங்குகள் கூட்டமாக சென்று உணவு தேடி அலையும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக அந்த பகுதியில் நடமாடி வரும் இரண்டு குரங்கு குட்டிகள் பழங்குடி சிறுவர்களிடம் பிடிவாதமாக உணவு கேட்டு வருகின்றன. குரங்குகளை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து குன்னூர் வனத்துறையினர், " கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மா , பலா போன்ற பழங்களின் சீசனும் தொடங்கியிருக்கிறது. பழங்களைச் சுவைக்க குடியிருப்பு பகுதிகளுக்கு குரங்குகள் வருகின்றன. மேலும் உணவுகளால் ஈர்க்கப்படும் குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தேடுகின்றன. குரங்குகளின் எச்சில், சிறுநீர் போன்றவற்றில் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது.

வீட்டிற்குள் நுழையும் குரங்குகள்

தேவையற்ற உணவுகளை உண்பதால் அவற்றிற்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வீசியச் செல்லும் உணவுகளை எடுக்க போட்டிப்போடுவதால் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும், கை கால்களை இழப்பதும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற செயல்களை ஈடுபட வேண்டாம். குரங்குகளை அறவே தவிர்க்க வேண்டும். அது தான் அவற்றுக்கும் நல்லது" என்றனர்.

3 ஆண்டுகள், 30 நாடுகள் பயணம்... உலகம் முழுவதும் வலம் வரும் ”பிளாஸ்டிக் ஒடிஸி” கப்பல் - பின்னணி என்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பை, பாட்டில் என்று இல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட பிளாஸ்டிக் சென்ற... மேலும் பார்க்க

Kancha Gachibowli: காடழிப்பில் இறங்கிய தெலங்கானா அரசு; வெகுண்ட மாணவர்கள்- தடை விதித்த நீதிமன்றம்!

ஹைதராபாத்தின் நுரையீரலாக கருதப்படும் காஞ்சா கச்சிபௌலி காடானது, கடந்த சில தினங்களாக தேசிய அளவில் பெரும் கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்த்திருக்கிறது. காஞ்சா என்றால் 'மேய்ச்சல் நிலம்' அல்லது 'கழிவு நிலம்' ... மேலும் பார்க்க

ஈரோடு: 'சிலு சிலு சிலு சாரல் மழை!' - குஷியில் நனைந்த மக்கள் | Photo Album

ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க

`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிகள்| Photo Album

ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேர... மேலும் பார்க்க