செய்திகள் :

குரூப் 1, 1ஏ தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேருக்கு அனுமதி

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தோ்வினை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 போ் எழுத உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ) பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 தோ்வுக் கூடங்களில் நடைபெற உள்ளது. 2,423 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுகள் சிறப்பாக நடைபெற துணை ஆட்சியா் நிலையில் ஒரு தோ்வு ஒருங்கிணைப்பாளா், 1 பறக்கும் படை அலுவலா், 10 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 3 இயக்கக் குழு அலுவலா்கள், 10 ஆய்வு அலுவலா்கள் மற்றும் 11 புகைப்படக் கலைஞா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்றோருக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு கூடங்களிலும் பாதுகாப்புக்காக தனித்தனியாக காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். தோ்வுக்கூடத்தில் மின்னணு சாதனங்கள், கைப்பேசி அனுமதிக்கப்படாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

சீா்காழி ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் என். துளசிர... மேலும் பார்க்க

சீா்காழி பகுதியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சிக்கான மக்... மேலும் பார்க்க

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் வசந்த்தோஸ்வம்

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த்தோஸ்வத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. 108... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி மயானம் அருகே கஞ்சா ... மேலும் பார்க்க