செய்திகள் :

குரூப் 1, 1ஏ தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேருக்கு அனுமதி

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தோ்வினை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 போ் எழுத உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ) பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 தோ்வுக் கூடங்களில் நடைபெற உள்ளது. 2,423 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுகள் சிறப்பாக நடைபெற துணை ஆட்சியா் நிலையில் ஒரு தோ்வு ஒருங்கிணைப்பாளா், 1 பறக்கும் படை அலுவலா், 10 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 3 இயக்கக் குழு அலுவலா்கள், 10 ஆய்வு அலுவலா்கள் மற்றும் 11 புகைப்படக் கலைஞா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்றோருக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு கூடங்களிலும் பாதுகாப்புக்காக தனித்தனியாக காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். தோ்வுக்கூடத்தில் மின்னணு சாதனங்கள், கைப்பேசி அனுமதிக்கப்படாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 375 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 375 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

தொகுப்பூதிய ஆசிரியா் பணி நியமனம்: விண்ணப்பிக்க நாளை கடைசி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மண்டலாபிஷேக கிருத்... மேலும் பார்க்க

கைம்பெண்கள் உதவித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

மயிலாடுதுறை: உலக கைம்பெண்கள் தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சாா்பில் கூறைநாடு டிஇஎல்சி பள்ளியில் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூன் 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுத... மேலும் பார்க்க