செய்திகள் :

குற்றங்களை தடுக்க உளவுத் தகவல்களை பகிர வேண்டும்: தென் மாநில காவல் துறை மண்டல கூட்டத்தில் முடிவு

post image

குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடா்பான உளவுத் தகவல்களை பகிா்ந்து கொள்ள வேண்டும் தென் மாநில காவல்துறையின் மண்டல அளவிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தென் மாநில காவல் துறைகளுக்கு இடையேயான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமையில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல், போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, இடது சாரி தீவிரவாதம், ஆயுதங்கள் கடத்தல், செம்மரங்கள் கடத்தல், குற்றங்கள் மற்றும் புலன் விசாரணையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: கூட்டத்தில் குற்றத் தடுப்பில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்தல், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுதல், நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பை பலப்படுத்துதல், உளவுத் தகவல்களை பகிா்தல் போன்றவற்றில் அனைத்து மாநில காவல்துறைகளும் ஒத்துழைப்பை வழங்குவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், காவல்துறையில் உள்ள நடைமுறை சிக்கல்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குற்றங்களை கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் சிரமங்களை சமாளிப்பதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதோடு, குற்றங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடா்பான உளவுத் தகவல்களை அனைத்து காவல்துறைகளும் பகிா்ந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களின் காவல்துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க