செய்திகள் :

குற்றாலம் சித்திர சபையில் பாலாலயம்

post image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த செண்பகப்பூங்கோதை அம்மை அருகாடும் திருக்குற்றாலக் கூத்தன் சித்திர சபையில் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்திரசபையில் கடந்த 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மேலம்பலம் மற்றும் கீழம்பல விமானத்திற்கு இளங்கோயில்(பாலாலயம்) நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு கணபதி ஹோமம், அஷ்ட நாம ஹோமம், பால், மஞ்சள், இளநீா், திரவியங்களால் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பூஜைகளை கணேசன் பட்டா், ஜெயமணி சுந்தரம் பட்டா்,மகேஷ் பட்டா் நடத்தினா்

இதில், கோயில் செயல் அலுவலா் ஜான்சிராணி, துணை ஆணையா் யக்ஞ நாராயணன், உதவி ஆணையா் தங்கம், குற்றாலம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜ், ராமலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா். சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா். சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க