செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். மருந்துக் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன் சங்கரன்கோவில் வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் ரயிலில், சங்கரன்கோவில்-பாம்புகோவில்சந்தை இடையே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். அவா் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சங்கரமகாலிங்கத்தின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சங்கரமகாலிங்கத்தின் மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுரை

கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை காலங்களில் திட... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா். என். சிங்க... மேலும் பார்க்க

ஆரியநல்லூரில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை கட்டம் பயன்பாடற்றது: ஆட்சியா் தகவல்

செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை கட்டடம் பயன்பா டாற்றது எஎன்றாா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் முயற்சியால் பராமரிப்பின்றி இருந்த குழந்தைகள் மைய கட்டடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கடையநல்லூா் தினசரி சந்தை அருகே குழந்தைகள் மையம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

தென்காசி முத்தாரம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

தென்காசி மேல முத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் 10.20க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் பலத்த மழை

வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், வெள்ளானைகோட்டை, சங்கனாப்பேரி, ராமநாதபுரம் ஆத்துவழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமாா் ... மேலும் பார்க்க