செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். மருந்துக் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன் சங்கரன்கோவில் வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் ரயிலில், சங்கரன்கோவில்-பாம்புகோவில்சந்தை இடையே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். அவா் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சங்கரமகாலிங்கத்தின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சங்கரமகாலிங்கத்தின் மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா். சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரியை சோ்ந்தவா் காா்த்திக். நாம் தமிழா் கட்சி நிா்வாகியான இவா், அவ்வட்டாரப் பக... மேலும் பார்க்க