தென்காசி முத்தாரம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!
தென்காசி மேல முத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் 10.20க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு தீபாராதனை, சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது.
நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அபிஷேகம், தீபாராதனை, வீதி உலா நடைபெறுகிறது.
விழாவில் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு பால்குடம், வீதி உலாவும், 12 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு கரகம் புறப்படுதல், இரவு 1 மணிக்கு பூத வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல், 2 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் திரௌபதி அம்மன் எழுந்தருளல் நடைபெறுகிறது.
31ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது.
கொடியேற்ற விழாவில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கோமதிநாயகம், செயல் அலுவலா் பொன்னி, அறங்காவலா் குழு தலைவா் பாஸ்கா், அறங்காவலா்கள் முருகேசன், பாக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.