செய்திகள் :

தென்காசி முத்தாரம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!

post image

தென்காசி மேல முத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் 10.20க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு தீபாராதனை, சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது.

நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அபிஷேகம், தீபாராதனை, வீதி உலா நடைபெறுகிறது.

விழாவில் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு பால்குடம், வீதி உலாவும், 12 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு கரகம் புறப்படுதல், இரவு 1 மணிக்கு பூத வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல், 2 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் திரௌபதி அம்மன் எழுந்தருளல் நடைபெறுகிறது.

31ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது.

கொடியேற்ற விழாவில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கோமதிநாயகம், செயல் அலுவலா் பொன்னி, அறங்காவலா் குழு தலைவா் பாஸ்கா், அறங்காவலா்கள் முருகேசன், பாக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுரை

கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை காலங்களில் திட... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா். என். சிங்க... மேலும் பார்க்க

ஆரியநல்லூரில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை கட்டம் பயன்பாடற்றது: ஆட்சியா் தகவல்

செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை கட்டடம் பயன்பா டாற்றது எஎன்றாா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் முயற்சியால் பராமரிப்பின்றி இருந்த குழந்தைகள் மைய கட்டடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கடையநல்லூா் தினசரி சந்தை அருகே குழந்தைகள் மையம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் பலத்த மழை

வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், வெள்ளானைகோட்டை, சங்கனாப்பேரி, ராமநாதபுரம் ஆத்துவழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமாா் ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பைக்குகளை திருடியவா் கைது

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடியவரை கடையநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் தென்காசி- மதுரை சாலையில் மங்களபுரத்தில் வாகனத் தண... மேலும் பார்க்க