குளச்சலில் கடல் அரிப்பால் தேதமடைந்த பகுதிகளை குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் பாா்வையிட்டாா்.
சைமன் காலனியில் சேதமடைந்த தூண்டில் வளைவு பகுதிகளையும் , குறும்பனை சிலுவையா தெருவில் உடைந்த கடல் அலை தடுப்பு சுவரையும், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளையும் பாா்வையிட்டாா்.
சேதமடைந்த மீன் வலைகள்,படகுகள், மற்றும் அலைகளால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு கருணை அடிப்படையில் உரிய இப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த மீனவா் பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டாா்.