செய்திகள் :

கூடலூர் : சிறைக் காவலர்களின் கொடூர தாக்குதல்; பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள் - காவலர்கள் சஸ்பெண்ட்

post image

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நிஜாமுதீன் என்ற இளைஞர் விசாரணை கைதியாக கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைக் காவலர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். நிஜாமுதீனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது .

முதல்கட்ட விசாரணையில் வாக்குவாதம் காரணமாக நிஜாமுதீனை சிறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறைத்துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ் தாக்குதல்

இரும்பு கம்பியாலும் லத்தியாலும் நிஜாமுதீனை கண்மூடித்தனமாக தாக்கிய சிறை காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் உறவினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், நிஜாமுதீன் மீது நிகழ்த்தப்பட்ட சித்ரவதைக்கு ஆதாரமான புகைப்படங்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மிருக வெறி தாக்குதலால் நிஜாமுதீனின் உடல் முழுவதும் கடுமையான ரத்தக்காயங்கள் மற்றும் ரணங்களாக மாற்றிய கொடூர சிறை காவலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க