செய்திகள் :

கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முதலில் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதுவே அவர்கள் மீண்டும் இணைய காரணமாக இருந்தது.

இதையடுத்து மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதற்காக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.

ஒவ்வொரு சந்திப்புக்கும் எதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் வரும்போது இருவரும் அதனை தவறவிடுவதில்லை. கடந்த சில மாதங்களில் இருவரும் 5 முறை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

தற்போது 6வது முறையாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளனர். இம்முறை இரண்டு குடும்பமும் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறது. ராஜ் தாக்கரே தனது தாயார் உட்பட குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்திருந்தார்.

குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வந்த ராஜ் தாக்கரேயிடம் மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, ''என்ன தேர்தல், எனது தாயார் என்னுடன் இருக்கிறார். புரிந்து கொள்ளுங்கள். இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது'' என்று தெரிவித்தார்.

ராஜ் தாக்கரே கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருடன் இருக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் இது குறித்து அளித்த பேட்டியில், ''தாக்கரே சகோதரர்கள் சந்தித்து பேசுவதை பார்த்து எனக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மராத்தியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, ``தீபாவளி நேரத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்வது வழக்கம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை'' என்று தெரிவித்தார். ஆனாலும் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது அவர்களிடையேயான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ராஜ் தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் பா.ஜ.க அவரை கைவிட்டுவிட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்த்துள்ளார்.

காசா: ஹமாஸ் - உள்ளூர் ஆயுதக் குழு இடையே மோதல்; 27 பேர் பலி - என்ன நடந்தது?

காசாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதி திட்டத்தின்படி பணயக் கைதிகள் ஒப்படைக்கப்படவிருந்த சூழலில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களிடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்து... மேலும் பார்க்க

இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வருகிறதா? இது ட்ரம்ப்பின் வெற்றி மட்டுமா? | Explained

'நான் முடித்து வைத்த 8-வது போராக இஸ்ரேல் - காசா போர் இருக்கும்' - இன்று காலை (இந்திய நேரப்படி), அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன வார்த... மேலும் பார்க்க

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்ன... மேலும் பார்க்க

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செ... மேலும் பார்க்க

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க