செய்திகள் :

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

post image

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. சென்னை உயர் நீதிமன்றம் நடத்திய வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

ஆனால் தமிழ்நாடு அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என தமிழக வெற்றிக் கழகம் சிபிஐ விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபோல பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் பாஜக வழக்கறிஞர்கள் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. விசாரணையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "இன்றைக்கு போட்ட உத்தரவுகள் எதுவும் நிரந்தரமான உத்தரவு கிடையாது. எல்லாமே இடைக்கால உத்தரவுகள் தான்.

இறுதி விசாரணைக்கு பிறகான தீர்ப்பில் இது இல்லை என்று சொல்லிவிட்டால் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ரத்து ஆகிவிடும்.

இடைக்காலமாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சொல்லி இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு அமைத்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் வில்சன் - மாநிலங்களவையின் தி.மு.க உறுப்பினர்

இன்று தீர்ப்பளிக்கப்பட்டபிறகு, வழக்குத் தொடுத்த இரண்டு பேர் எங்கள் பெயரில் மோசடியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வழக்கு மோசடியாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால் நீதிமன்றம் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துவிடும். அப்படியும் இந்த தீர்ப்பு ரத்தாகலாம்.

நாங்களும் நீதிமன்ற உத்தரவின்படி, எதிர்மனு தாக்கல் செய்கிறோம். இது இடைக்கால தீர்ப்புதான். 41 பேர் இறந்திருக்கிறார்கள், 146 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தங்களை பாதுகாக்க முடியும் என்ற நினைப்பில் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இடைக்கால தீர்ப்பு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பிக்குப் பிறகு, ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படியே செயல்படும். தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு குழு இதுவரை மேற்கொண்ட விசாரணையை அப்படியே சிபிஐக்கு மாற்றிவிடும்." எனப் பேசியுள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்ன... மேலும் பார்க்க

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செ... மேலும் பார்க்க

கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.... மேலும் பார்க்க

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதம... மேலும் பார்க்க

'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்க... மேலும் பார்க்க