செய்திகள் :

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

post image

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை சுற்றுவட்டாரங்களில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வருகிறது.

ரோலக்ஸ் யானை

விளை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்தப்படுவதுடன், அவ்வபோது மனிதர்களையும் தாக்கி கொல்வதாக புகார் எழுந்தது. அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர்.

விவசாயிகள் கோரிக்கையால் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக வனத்துறையினர் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து என்கிற 2 கும்கி யானைகளை அழைத்து வந்திருந்தனர். வன மருத்துவர் விஜய ராகவன், கடந்த மாதம் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார்.

நரசிம்மன் யானை
முத்து யானை

அப்போது அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக ‘ஆபரேஷன் ரோலக்ஸ்’ தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டுக்கும் திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானைகள் பாதுகாப்பு கருதி, அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டன. அவற்றுக்கு பதிலாக டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி கும்கி யானை கோவை வரவழைக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ் யானை
சின்னத்தம்பி யானை

ஏற்கனவே கபில்தேவ் என்கிற கும்கி யானையும் கோவை அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த 2 யானைகள் மூலம் ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்கும் முயற்சி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செ... மேலும் பார்க்க

கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.... மேலும் பார்க்க

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்க... மேலும் பார்க்க

"வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன்.!" - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினார். பாஜக விழாவில்நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்... மேலும் பார்க்க