செய்திகள் :

"வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன்.!" - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

post image

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினார்.

பாஜக விழாவில்

நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணில் பச்சை தமிழர் நயினார் நாகேந்திரன் புறப்பட்டுள்ளார். திமுக ஆட்சி மாற்றத்திற்கு கவுன்டவுன் தொடங்கியுள்ளது. திமுக மன்னராட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு கவுன்டவுன் தொடங்கியது.

அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி 100 நாள் வேலை திட்டத்திற்கான 2,999 கோடி நிதியை பெற்றுத் தந்தார். ஆனால் இவர்களால் 100 நாட்கள் வேலைத் திட்ட சம்பளத்தை கூட கொடுக்க இயலவில்லை. உதயநிதிக்கு எப்போதும் நம் கூட்டணி பற்றிய சிந்தனைதான். அமித் ஷா ஜியை சந்தித்த பின் திமுக மிரண்டு போயிருக்கிறது.

விழாவில் ஆர்.பி.உதயகுமார்

வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் பேசினால் நடுங்கிவிடுகிறார்கள்; எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகிறார்கள், நயினார் நாகேந்திரனின் புரட்சிப் பயணத்தில் ஆட்சிமாற்றம் உறுதி, திமுக ஆட்சி குப்பையில் போடப்படும்" என்றார்.

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதம... மேலும் பார்க்க

'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்" - திறக்கப்படாத தினசரி சந்தை; குமுறும் வியாபாரிகள்!

கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில், நகராட்சி சார்பில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி சந்தை வளாகத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 ஆம் நிதியாண்டின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 77 புத... மேலும் பார்க்க

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வா... மேலும் பார்க்க