செய்திகள் :

கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்

post image

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆட்சியமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் மட்டுமே இருக்கும், அதிமுகதான் ஆட்சியமைக்கும், கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவெடுப்பார்கள். அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "மத்திய அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என்று தெளிவாகக் கூறிவிட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதால் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாதுதம்பிதுரை

சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!

தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

தூத்துக்குடி: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.உலகம் முழுவதும் இயேசு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதம்: அதிமுக ஆதரவு

கோவையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி நெசவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.கோவையில் விசைத்தறி நெசவாளர்கள் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மர்ம நபர்களால் சனிக்கிழமை இரவு வெட்டப்பட்ட நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா(30). க... மேலும் பார்க்க

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதிமுக அவ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் ம... மேலும் பார்க்க