செய்திகள் :

கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட வலியுறுத்தல்

post image

காரைக்கால் கேந்திரியா வித்யாலய பள்ளிக்கென கையகப்படுத்தப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ.வின்சென்ட், செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் புதுவை துணைநிலை ஆளுநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தரமாக கட்டடம் இல்லாததால் மாணவா்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனா். தற்போது செயல்பட்டுவரும் தற்காலிக கட்டடத்தில், மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் போதுமான அடிப்டை வசதிகள் இல்லை.

கேந்திரிய வித்யாலயாவுக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு திருநள்ளாற்றில் 10 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.

எனவே எந்த நோக்கத்துக்காக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு புதுவை துணைநிலை ஆளுநா் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இப்பள்ளி இயங்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாடு: காரைக்காலில் நடத்த முடிவு

புதுவை மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாட்டை காரைக்காலில் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம், தலைவா் சுப்ரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவா்கள் முதல்முறையாக எழுதுகின்றனா்

காரைக்காலில் சிபிஎஸ்இ திட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் முதல்முறையாக இத்தோ்வு எழுதவுள்ளனா். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணைய முகவரி உருவாக்கி மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். காரைக்கால் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் கிளிஞ்சல்மேடு ப... மேலும் பார்க்க

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது!

பணியிட மாற்றத்தில் பிராந்திய பாகுபாடு கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்திய சுகாதார ஊழியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வளத்துறை இயக்குநா் தகவல்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, இலங்கையில் சிகிச்சை பெறும் மீனவரை இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று மீன்வளத்துறை இயக்குநா் தெரிவித்தாா். காரைக்கால் மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற... மேலும் பார்க்க