செய்திகள் :

கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை வசதி கோரும் மக்கள்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி கிராமத்தின் கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து தார் எழும்பி குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவே பிரதான சாலையாக இருப்பதால் அன்றாடம் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வரும் மக்களும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வரும் மாணவர்களும் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இப் பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் பேசும்போது,

``இந்தச் சாலை அமைத்து குறைந்தது பத்து வருடங்கள் ஆகிறது. இவ்வாறு முற்றிலும் சேதமடைந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாகிறது. மழைக்காலங்களில் இந்தச் சாலையில் நடக்கக் கூட முடிவதில்லை. பள்ளங்கள் நிரம்பி, தண்ணீர் தேங்கி நின்று, வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. வீதியில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் வெளியில் சென்றாலே அச்சத்திலே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது" என தங்களுடைய வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

கே.பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சரோஜா இதுபற்றி பேசும்போது,

"அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடம் வந்து கால்ல உழுந்து ஓட்டு மட்டும் கேக்குறாங்க. நாங்க ரோடு கேட்டா மட்டும் கண்டுக்காமலே போறானுங்க. என் பசங்க பேர புள்ளைங்க எல்லாம் இந்த ரோடு வழியா தான் போறாங்க. எனக்கு அவங்க வீடு திரும்புற வரையும் பொக்கு பொக்குனே இருக்கும். ஒவ்வொரு நாளும் இங்க போராட்டம் தான். நானும் இந்த ஊர்காரங்களும் எங்க ஊர் தலைவரை எங்க பார்த்தாலும் ரோடு போடச்சொல்லி கேக்குறோம் ஆனா, அவர் காதில வாங்கின பாடு இல்லை. இனிமே யார் இந்த பட்டிக்காட்டில ரோடு போட போறாங்க அவ்ளோ தான் இப்படியே மிச்ச காலத்தை கழிக்க வேண்டியதுதான்" என்கிறார் சரோஜா.

கல்லூரி மாணவி வினிதா இதுகுறித்து பேசிய போது,

"நான் இப்போ காலேஜ் படிக்கிற... ஆனா, நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே இந்த ரோடு இப்படி தான் இருக்கு. ஒருமுறை வேற சில இடங்களில் சாலை அகலப்படுத்தும் பெயரில் எங்க ரோடு பக்கத்துல மண் அகழ்ந்துவிட்டுட்டு போய்ட்டாங்க அதே, இங்க ரெண்டு லோடு மண் கொட்டுங்ன்னு கேட்ட போதும் யாரும் காதில் வாங்காம போய்ட்டாங்க. எந்தத் தலைவரும், அதிகாரியும் எங்களையும் எங்க வாழ்வாதாரத்தை பத்தியும் கவலைப்படலை" என்றார்.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு வரை நீடிக்கும் இச்சாலையின் தூரம் குறைவு என்றாலும், எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பாக அரசும் அப்பகுதியின் ஊராட்சியும் விரைவில் சாலை சீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. அதுவே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது. 0

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” - உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் ந... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல்

நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் தொடர் மழையில் நனைந்ததில் முளைத்து சேதமடைந்ததாக டெல்டா விவசாயிகள் கூறி வந்தனர். இதையடுத்து கடந்த 22ம் ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்... மேலும் பார்க்க