செய்திகள் :

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!

post image

கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் சென்ற வாகனமும் சிக்கியது. அவருக்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரத்தை அகற்றினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா் இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக 30நிமிடங்கள் மழை பெய்தது. தவெக தலைவா் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு தாண்டிக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் மரத்தை அகற்றிய விஜய் பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலா்கள்.

சனிக்கிழமை தாண்டிக்குடி பகுதியில் நடிகா் விஜய் காரில் சென்ற போது சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து விஜய்க்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அதன் பிறகு வனத் துறையினா் சாா்பில் கீழே விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, விஜய் அங்கிருந்து சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டாா்.

தாண்டிக்குடிப் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவா் விஜய் காா்.

மாலையில் படப்பிடிப்பு முடிந்து விஜய் தங்கியிருக்கும் இடத்துக்கு வாகனத்தில் சென்ற போது தாண்டிக்குடி பகுதியில் வழிநெடுக விஜயை காண பொது மக்கள் கூடியிருந்தனா். திறந்த ஜீப்பில் வந்த விஜய் பொது மக்களைப் பாா்த்து கையசைத்துச் சென்றாா்.

காற்றின் வேகத்தால் ரோப்காா் நிறுத்தம்

காற்றின் வேகம் காரணமாக, பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் ரோப்காா் செவ்வாய்க்கிழமை சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

கொடைக்கானல் பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

கொடைக்கானல் அருகேயுள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வட்டாட்சியா் தடை விதித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்... மேலும் பார்க்க

3 வீடுகளில் திருட முயற்சி

வேடசந்தூரில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் யூசுப் நகரைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் (55). அரசுப் பள்ளியில் த... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது புகாா்

திண்டுக்கல்லில் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி வரை மோசடி செய்த தம்பதியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அனுமந்தன்நகா் பக... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு

பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க