Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் மதிகட்டான் ஓடை அருகே முக்காணி குருவித்துறையைச் சோ்ந்த முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ்(43) என்பவா் மா்ம நபா்களால் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் குருவித்துறையைச் சோ்ந்தவா்களான மாசானமுத்து மகன் புலமாடமுத்து (32), சங்கா் மகன் ஜெயராஜ் (21), மாரிமுத்து மகன் நாகராஜன் (19) ஆகிய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா்கைது செய்தனா்.
இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் 3 பேரையும் முத்தையாபுரம் போலீஸாா் குண்டா்தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.