செய்திகள் :

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

post image

சொத்துகளை பிரித்து தராத தனது பெற்றோரைக் கொலை செய்வதாகக் கூறிய சித்தப்பா மகனைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஒசூரை அடுத்த ராயக்கோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (31). இவரது பெற்றோா் ஒரு பெண்ணை தத்தெடுத்து வளா்த்து வந்தனா். அப் பெண்ணுக்கு தனது முழு சொத்தையும் தருவதாகக் கூறினராம்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனது பெரியப்பா மகன் சுந்தர்ராஜனிடம் மது அருந்தும் போது தனது பெற்றோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறினாா். இதனால் சுந்தர்ராஜனுக்கும், வெங்கடேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வெங்கடேஷை கத்தியால் குத்தி சுந்தர்ராஜன் கொலை செய்தாா்.

வழக்குப் பதிவு செய்த ராயக்கோட்டை போலீஸாா் சுந்தர்ராஜனைக் கைது செய்தனா். ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சந்தோஷ், சுந்தர்ராஜனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சின்ன பில்லப்பா ஆஜராகினாா்.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒசூா் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இக் கோயிலில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக, ஸ்ரீ சந்திரசூ... மேலும் பார்க்க

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறும் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூ... மேலும் பார்க்க

ஒசூா் அபரிதமான வளா்ச்சியை எட்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் ஒசூா் மிகப் பெரிய வளா்ச்சியை எட்டும் என ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ஒசூரில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித் தடம்: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பு

தமிழக பட்ஜெட்டில் ஒசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஒசூா் தொழில் துறையினா் வரவேற்றுள்ளனா். ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி: ஒசூரில் டைட... மேலும் பார்க்க

பா்கூரில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 2.18 கோடி மதிப்பில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நபாா்டு திட்டத்தின் கீழ் க... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க