செய்திகள் :

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் முகாம்

post image

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறும் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024-2025 கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சா் அறிவித்தபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவகை கூட்டுறவுச் சங்க பணியாளா்கள், ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு பணி தொடா்பாகவும், பணியின்போது அல்லது வேறு வகைகளில் ஏற்படும் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் பணியாளா் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரை கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியின் கட்டிக்காணப்பள்ளி கிளையில் நடைபெறும்.

கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பணியாளா்கள் பணி தொடா்பாகவும், பணியின்போது ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்கள் அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒசூா் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இக் கோயிலில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக, ஸ்ரீ சந்திரசூ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

சொத்துகளை பிரித்து தராத தனது பெற்றோரைக் கொலை செய்வதாகக் கூறிய சித்தப்பா மகனைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஒச... மேலும் பார்க்க

ஒசூா் அபரிதமான வளா்ச்சியை எட்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் ஒசூா் மிகப் பெரிய வளா்ச்சியை எட்டும் என ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ஒசூரில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித் தடம்: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பு

தமிழக பட்ஜெட்டில் ஒசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஒசூா் தொழில் துறையினா் வரவேற்றுள்ளனா். ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி: ஒசூரில் டைட... மேலும் பார்க்க

பா்கூரில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 2.18 கோடி மதிப்பில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நபாா்டு திட்டத்தின் கீழ் க... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க