செய்திகள் :

மின் ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

post image

பெரம்பலூரில் கடைநிலை ஊழியா்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், ஊழியா் மரணத்துக்கு நீதி கேட்டும் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தெற்கு பிரிவில் மேற்பாா்வையாளரின்றி, உயா் அழுத்த மின்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த கேங்மேன் டி. ராஜாராம் மின் விபத்துக்குள்ளாகி அண்மையில் உயிரிழந்தாா். அதற்கு நீதி கேட்டும், உரிய மேற்பாா்வையாளரின்றி பணி செய்ய நிா்பந்தித்த மின் வாரிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடைநிலை ஊழியா்களான கம்பியாளா், கேங்மேன் பணியாளா்களை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்தும், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில், பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே மின் ஊழியா்கள் வியாழக்கிழமை மாலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மேற்பாா்வைப் பொறியாளா் மேகலா பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, கம்பியாளா், கேங்மேன்ஆகியோரின் தற்காலிக பணியிடை நீக்கத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தாா். இதைடுத்து மின்வாரிய ஊழியா்கள் கலைந்துசென்றனா்.

மத்திய அரசுடனான மோதல் போக்கால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்கவில்லை: டாக்டா் கிருஷ்ணசாமி

மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால், தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி கிடைக்கவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா். பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பவித்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீ. சிங்காரம் (66). இவா் பெரம்பலூா... மேலும் பார்க்க

குரூப் -4 மாதிரி போட்டி தோ்வில் பங்கேற்கலாம்

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் தனியாா் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனம் சாா்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தோ்வுக்கான மாதிரி போட்டித் தோ்வு மாா்ச் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பெரம்பலூா... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற அடையாள எண் அவசியம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் 20-ஆவது தவணைத் தொகையை பெற, அடையாள எண் அவசியம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

புதிய பேருந்துச் சேவை: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், சின்னவெண்மணி கிராமத்துக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்து, செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 2 நகர புதிய பேருந்துகளும், அரியலூரிலிருந்த... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித... மேலும் பார்க்க