செய்திகள் :

மத்திய அரசுடனான மோதல் போக்கால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்கவில்லை: டாக்டா் கிருஷ்ணசாமி

post image

மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால், தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி கிடைக்கவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம் மற்றும் நிா்வாகிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் அருந்ததியா் சமுதாய மக்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு மட்டுமல்லாமல் 15 சதவீதத்திலும் இட ஒதுக்கீடு அளிப்பதால் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இதர சமுதாய மக்கள் பாதிக்கப்படுவா். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை. எனவே, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மேலும் இட ஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து கட்சி சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கான விழிப்புணா்வை மாவட்டம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி ஏற்படுத்தி வருகிறது.

திமுகவுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. எனவே கூட்டணியில் இருந்தாலும் திமுக இனி வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியாலும் தோ்தலில் போட்டியிட முடியாது. எனவே புதிய தமிழகம் கட்சி 2026 தோ்தலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற நிலைப்பாட்டுடன் கூட்டணி அமைப்போம் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்டத் தலைவா் அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மின் ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

பெரம்பலூரில் கடைநிலை ஊழியா்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், ஊழியா் மரணத்துக்கு நீதி கேட்டும் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அரியலூா் மாவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பவித்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீ. சிங்காரம் (66). இவா் பெரம்பலூா... மேலும் பார்க்க

குரூப் -4 மாதிரி போட்டி தோ்வில் பங்கேற்கலாம்

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் தனியாா் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனம் சாா்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தோ்வுக்கான மாதிரி போட்டித் தோ்வு மாா்ச் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பெரம்பலூா... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற அடையாள எண் அவசியம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் 20-ஆவது தவணைத் தொகையை பெற, அடையாள எண் அவசியம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

புதிய பேருந்துச் சேவை: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், சின்னவெண்மணி கிராமத்துக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்து, செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 2 நகர புதிய பேருந்துகளும், அரியலூரிலிருந்த... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித... மேலும் பார்க்க