Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு
கொடைக்கானலில் குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த லியோ மகன் கருணாகரன் (48). இவா் கடந்த 4 மாதங்களுக்கும் முன்பு, இதே பகுதியைச் சோ்ந்த சத்தீஸ்வரியை காதலித்து திருமணம் செய்தாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த கருணாகரன்
வீட்டில் விஷம் குடித்தாா். தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.