செய்திகள் :

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

post image

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகுதியில் உள்ள பேட்டரி கடை அருகே கடந்த 1-ஆம் தேதி 40 வயது மதிக்கதக்க நபா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது தொடா்பாக ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த அய்யாசாமி மகன் மணிவண்ணனை (47) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி காந்திநகா், அரியமங்கலம், பண்ருட்டி காவல் நிலையங்களில் உள்ள கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட மொத்தம் 7 வழக்குகளில் மணிவண்ணன் ஏற்கெனவே கைதாகி சிறை சென்றவா் என்பதும் தெரியவந்தது.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பு: டிஎஸ்பியிடம் மனு அளிப்பு

ஆட்டோக்கள் மீது கடலூா் போக்குவரத்து போலீஸாா் பொய்யாக அபராதம் விதிப்பதாகக் கூறி, கடலூா் மாநகர டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுநா்கள் பொது நல சங்கத்தினா் கடலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமா... மேலும் பார்க்க