செய்திகள் :

கொல்லப்பட்ட ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு! சாலைகளில் திரண்ட மக்கள்!

post image

இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் அந்நாட்டின் விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 28) நடைபெறுவதால், லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ளனர்.

"ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி மற்றும் ஏவுகணைகளின் தளபதி ஜெனரல். அமிர் அலி ஹாஜிஸாதேஹ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய 12 நாள் போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அறிவித்தார்.

இறுதிச் சடங்கில்...

இருப்பினும், இந்தப் போரில் ஈரானின் 30 முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரை கொன்றதுடன், 8 அணுசக்தி தளவாடங்கள் மற்றும் 720-க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றை தாக்கி தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட ஈரானின் தளபதிகள், விஞ்ஞானிகள் மற்றும் 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 60 பேருக்கான இறுதிச் சடங்குகள், அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகின்றன.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க லட்சக்கணக்கான ஈரான் நாட்டு மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ள நிலையில், போரில் கொல்லப்பட்ட அனைவரது உடல்களும் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளன.

முன்னதாக, ஈரானில் இதுபோன்ற முக்கிய தளபதிகள் மற்றும் தலைவர்களின் இறுதிச் சடங்குகள், அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அவரது வருகை குறித்து, இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Funeral of slain Iranian generals and scientists, People gather on the streets of Tehran.

இதையும் படிக்க: நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க

சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரோங்ஜியாங்கிலு... மேலும் பார்க்க

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது... மேலும் பார்க்க

ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு!

ரஷியா நாட்டுக்குள், மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷியா அதிபர் விளாதிமீர் புதின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்! 16 வீரர்கள் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டிற்குள் செயல்படும் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்குவாவின், வ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் வெள்ளம்: 3 நகரங்களுக்கு எச்சரிக்கை! அதிகரிக்கும் உயிர் பலிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தற்போது 11 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் வெள... மேலும் பார்க்க