செய்திகள் :

கொல்லம் அருகே சூட்கேஸில் மனித எலும்புக்கூடு!

post image

தெற்கு கேரள மாவட்டத்தில் உள்ள தேவாலய கல்லறைக்கு அருகில் சூட்கேஸ் ஒன்றில் மனித எலும்புக்கூடு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்த போலீஸார் மர்ம பொருள், வெடிகுண்டு ஏதேனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூட்கேஸ் திறந்ததும் மனித எலும்புக்கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

எலும்புக்கூட்டின் வயது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. விரிவான ஆய்வுக்குப்பிறகு தான் தெளிவு கிடைக்கும் என்று கொல்லம் கிழக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த எலும்புக்கூடு அடங்கிய சூட்கேஸ் சாலையிலிருந்து கல்லறைப் பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கல்லறை பகுதிக்கு வந்தபோது சூட்கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

நடிகை செளந்தர்யா சென்ற விமானம் வெடித்தது விபத்தல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மேலும், செளந்தர்யா விமானம் வெடித்த சம்பவத்தி... மேலும் பார்க்க

திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.ஞாயிற்றக... மேலும் பார்க்க

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க