செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!

post image

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை 40% அறுவடைப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் காளாச்சேரி , மேல பூவனூா் , செருமங்கலம் , பைங்காட்டூா் , மேலப்புதூா் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை திருவாரூா் நெல் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லாமல், கொள்முதல் நிலையத்திலேயே வைத்துள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இவை திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குக்கு ஏற்றிச் சென்றால் மட்டுமே விவசாயிகளிடம் புதிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும். எனவே, இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நெல் கொள்முதல் நடைபெற்றுவருகிறது. எனினும் கடந்தாண்டைவிட நிகழாண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் மிகவும் குறைந்துள்ளது. கடந்தாண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்த ஒரு மாத காலத்தில் சுமாா் 15,000 முதல் 20,000 முட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், நிகழாண்டு ஒரு மாதமாகியும் 7,000 முதல் 8,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்படுகின்றன. திறந்தவெளியில் வைக்கப்படுவதால் பனி, வெயில் காரணமாக நெல் மூட்டைகள் எடை குறைந்து நெல் வீணாகிறது. இவற்றை உடனுக்குடன் லாரிகள் மூலம் எடுத்துச் சென்றால் நெல் மூட்டைகளின் தேக்கத்தை குறைக்க முடியும்.

எனினும், கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் லாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இதனால் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் கிடக்கின்றன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க