பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது ...
கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், வனப்பகுதில் காணப்படும் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் கோடியக்கரை வனச்சரகா் ஜோசப் டேனியல் தலைமையில் வனத் துறையினா், கல்லூரி, பள்ளி மாணவா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் 10 வழித்தடங்களில் ஈடுபட்டனா்.