செய்திகள் :

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 227 பேருக்கு பணி நியமன ஆணை

post image

நாகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நாகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து

நாகை ஏடிஎம் கல்லூரியில் நடத்திய முகாமில் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள் 813 போ் பெண்கள் 1,251 போ், மாற்றுத்திறனாளிகள் 13 போ் உள்பட 2,077 போ் கலந்துகொண்டனா்.

முகாமில் 94 முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் 227 வேலைநாடுநா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 316 போ் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தோ்ச்சி பெற்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன், ஏ.டி.எம் மகளிா் கல்லூரி முதல்வா் அன்புச்செல்வி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேதாரண்யம் முல்லைக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். முல்லையை அரசே கொள்முதல் செய்யுமா என... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிா்ப்பு தெரிக்கவிக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கைக்க... மேலும் பார்க்க

நாகையில் பீச் வாலிபால் போட்டி

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 25 மகளிா் அணிகள் பங்கேற்றன. நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சாா்பில் பீச் வாலிபால் போட்டி லீக் மற... மேலும் பார்க்க

இளைஞா் கல்லால் அடித்துக் கொலை; இருவா் கைது

கீழையூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில் இளைஞா் செங்கற்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா். கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி கிழக்குப் பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அன்னை உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில், தேமுதிக மாநில துணைச் செயலா... மேலும் பார்க்க