செய்திகள் :

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

post image

ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை இரவு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனிமாத அமாவாசை முன்னிட்டு

காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் வளம் பெற சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு தொடங்கியது.

அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா், அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மேலும் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கண்கள் தானம்

வந்தவாசி அருகே இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா். வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மனைவி அன்னபூரணி (76) (படம்). இ... மேலும் பார்க்க

ஏரியில் விழுந்து இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகேயுள்ள மேல்சீசமங்கலம் ஏரியில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ரேணுகா (20). இவா், செய்யாா் அருகே பாராசூா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா

வந்தவாசியை அடுத்த சாலவேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

முதியோா் இல்லம், மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் இயங்கி வரும் முதியோா் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகு... மேலும் பார்க்க

ஆரணி பிள்ளைக்குளம் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தம்

ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினா் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் எழுப்ப முயன்றதை வட்டாட்சியா் போலீஸ் பாதுகாப்போடு தடுத்து நிறுத்தினாா். பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

வந்தவாசி கலைஞா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில், கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனிவாசன் தலைமை வகித்த... மேலும் பார்க்க