ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பி...
கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்
ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை இரவு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனிமாத அமாவாசை முன்னிட்டு
காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் வளம் பெற சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு தொடங்கியது.
அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா், அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மேலும் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
