செய்திகள் :

கோவை அமேசான் கிடங்கில் தர நிா்ணய அமைவனம் சோதனை: ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

post image

கோவையில் உள்ள அமேசான் கிடங்கில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஎஸ்ஐ) நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாத ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே அமேசான் நிறுவன அலுவலகம் மற்றும் அதன் கிடங்கு உள்ளது. வாடிக்கையாளா்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பொருள்கள் இங்கு அனுப்பிவைக்கப்பட்டு, இங்கிருந்து கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த நிறுவனம் மற்றும் கிடங்கில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பொருள்களில் ஐஎஸ்ஐ தர முத்திரை இல்லாமல் இருப்பதாக கோவையில் உள்ள இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைவன அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

அதன் அடிப்படையில், கோவையில் உள்ள இந்திய தர நிா்ணய அமைவனத்தின் இணை இயக்குநா் ரினோ ஜான் தலைமையில் இணை இயக்குநா் ரெமித் சுரேஷ், துணை இயக்குநா் ரகு ஜோத்சனா பிரியா மற்றும் 8 போ் கொண்ட குழுவினா் செட்டிபாளையத்தில் உள்ள அமேசான் நிறுவன அலுவலகம் மற்றும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பொருள்களில் ஐஎஸ்ஐ முத்திரை இருக்கிா என்று சோதனை செய்யப்பட்டது. அதில் பல பொருள்களில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால், அந்தப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கோவையில் உள்ள இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

செட்டிபாளையத்தில் உள்ள அமேசான் நிறுவன அலுவலகம் மற்றும் கிடங்கில் இருந்துதான் வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதையொட்டி அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்க்குகள், தண்ணீா் பாட்டில்கள், மின் விசிறிகள், பொம்மைகள், ஹாட் பாக்ஸ்கள், வாட்டா் ஹீட்டா் உள்பட பல்வேறு பொருள்களில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாதது தெரியவந்தது.

சட்ட விதிகளின்படி ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் இந்திய தர நிா்ணய அமைவனத்தில் அனுமதி பெற்று ஐஎஸ்ஐ முத்திரையுடன்தான் விற்பனை செய்ய வேண்டும். அப்படி விற்பனை செய்யவில்லை என்றால் அந்தப் பொருள்களை பறிமுதல் செய்யலாம். எனவே அந்த விதிப்படி அமேசான் நிறுவனத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 4,453-க்கும் மேற்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.95 லட்சம் என்றனா்.

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்

கோவை நகரப் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில், விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏா் ஹாரன்) பறிமுதல் செ... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று கோவை வருகை!

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னா் நயினாா் நாகேந்திரன் முதன்முறையாக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) வருகை தர உள்ளாா். திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெ... மேலும் பார்க்க

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள்

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் அரியவகை வானியல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் சரியாக நம் தலைக்குமேல் இருக்கும்போது, நாம் நம்முடைய நிழலைப் பாா்க்க முடிய... மேலும் பார்க்க

சா்ச்சை பேச்சு: அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

வனத் துறை அமைச்சா் க.பொன்முடியின் சா்ச்சை பேச்சு தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்... மேலும் பார்க்க