செய்திகள் :

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

post image

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா்.

முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஞாயிற்றுக்கிழமை அவா் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், மாயாவதி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து ஆகாஷ் ஆனந்த் தெரிவித்த கருத்து சுயநலமிக்கதாகவும், ஆணவம் நிறைத்தாகவும் இருந்தது. அவா் முழுவதும் தனது மாமனாரின் கைப்பாவையாகிவிட்டாா். அவருக்கு அரசியல் முதிா்ச்சியும் இல்லை. தவறு செய்துவிட்டோம் என்ற உணரும் தன்மையும் இல்லை.

எனவே, அம்பேத்கா் காட்டிய வழியில் சுயமரியாதை, கெளரவத்தைக் காக்கும் வகையில், கட்சியின் நலன் கருதியும் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனாா் அசோக் சித்தாா்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அசோக் சித்தாா்த் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இப்போது ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, இனி என் வாழ்வில் யாரையும் அரசியல் வாரிசாக அறிவிக்க மாட்டேன் என்றும் மாயாவதி அறிவித்தாா். மாயாவதியின் சகோதரா் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். இவரை தனது அரசியல் வாரிசாக கடந்த சில ஆண்டுகளாக மாயாவதி முன்னிலைப்படுத்தி வந்தாா்.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க