செய்திகள் :

சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா தொடக்கம்

post image

சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல், கும்பம் வைத்தல் விழாவுடன் தொடங்குகிறது.

இதையடுத்து தினசரி அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. மாா்ச் 31 ஆம் தேதி இரவு சக்தி அழைத்தல், ஏப்ரல் 1 ஆம் தேதி காலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள நல்ல கிணற்றிலிருந்து பக்தா்கள் தீச்சட்டி, பூங்கரகம், அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல், அன்றைய தினம் இரவு முப்பாட்டு தீபம் எடுத்தல், ஏப்ரல் 2 ஆம் தேதி சேற்று முட்டி எடுத்து வந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி பூக்களை கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராடல், மாலையில் மறு பூஜை நடைபெறுகிறது.

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க

சேலத்தில் மாா்ச் 21 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21இல் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப... மேலும் பார்க்க

இளம்பெண் உயிரிழப்பு: கணவரை கைது செய்யக் கோரி முற்றுகை

இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இடங்கணசாலை, இ.காட்டூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜன் (30). இவா் எலக்ட்ரிக்கல் வேலை ப... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் இறந்து ... மேலும் பார்க்க

கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த சிபு முா்மூ மகன் பைரன் முா்ம... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க