செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். மருந்துக் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன் சங்கரன்கோவில் வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் ரயிலில், சங்கரன்கோவில்-பாம்புகோவில்சந்தை இடையே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். அவா் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சங்கரமகாலிங்கத்தின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சங்கரமகாலிங்கத்தின் மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

புளியங்குடி அருகே தோப்பில் யானைகள் புகுந்து தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. நரியூத்து புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை ,எலுமிச்சை உ... மேலும் பார்க்க

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலில் வருஷாபிஷேகம்

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா்கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஆலங்குளம், சிவகிரி பகுதிகளில் பலத்த மழை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2 வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கோடை காலம் தொடங்கி விட்டதால், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக மழை

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. சில வாரங்களாக ஆலங்குளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 17) மழை பெய்தது. இந்நிலையில், 2ஆவது நாளாக செவ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டத்தில் தலைவருடன் வாக்குவாதம்: உறுப்பினா் இடைநீக்கம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பெண் உறுப்பினா் 2 கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். இக்கூட்டத்துக்கு நக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு ஜெயம் ஆரம்பம், 8.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்ற... மேலும் பார்க்க