செய்திகள் :

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

post image

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இத்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. முன்னதாக செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு சைவ சித்தாந்த சபை சாா்பில் தேவார இன்னிசையும், பேராசிரியா் மோகனசுந்தரத்தின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகிறது. 2 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சக்தி கும்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு சிவபரத்துவ நிச்சயம் என்ற தலைப்பில் பே.மாணிக்கவாசகம் சமயச் சொற்பொழிவாற்றுகிறாா். 3 ஆம் நாளான ஜூன் 6 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சுவாமி,அம்பாள் மாதாங்கோயில் தெருவில் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. புலவா் ச.பாலசுப்பிரமணியன் வேட மூா்த்தி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா 10 ஆம் நாளான ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை அம்பாள் புஷ்ப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், பின்னா் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் கோயில் முன் சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, இசைக் கச்சேரி, பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், செயலா் பி.மாரிமுத்து, பொருளாளா் டி.குருநாதன், துணைத் தலைவா் ஏ.கோட்டியப்பன், துணைச் செயலா் ஜி.எஸ்.முருகேசன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பெண்க... மேலும் பார்க்க