செய்திகள் :

சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற நபர்!

post image

சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்த 70 வயது தாயைக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.

சத்தீஸ்கர் மாநிலம், நாகேஷ்வர் நகரில் வசித்து வருபவர் தேவாங்கன் (45). ரிக்‌ஷா ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தேவாங்கன் ரூ.800க்கு ஒரு நாய்க்குட்டியை வாங்க ஆசைப்பட்டிருக்கிறார். அவரிடம் ரூ.200 குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதை அவர் தனது தாய் கணேஷியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த தேவாங்கன் தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். அப்போது அவரது மனைவி ராமேஸ்வரியையும் தாக்கியதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பின்னர் தேவாங்கன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

தகவல் கிடைத்ததும சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தேவாங்கன் தாக்கிய இரண்டு பெண்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷி பலியானார் என்று போலீஸார் தெரிவித்தனர். தப்பியோடிய தேவாங்கனை பிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோ... மேலும் பார்க்க

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க