செய்திகள் :

சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!

post image

சபரிமலை தங்க கவசம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவாரபாலகர்கள் சிலைக்கு தங்க கவசம் உபயமாக வழங்கியுள்ளார்.

ஐகோர்ட் கண்டனம்

இதற்கிடையே அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம் போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி சென்னைக்கு கொண்டுசென்றுள்ளார் உண்ணிகிருஷ்ணன் போற்றி.

ஐகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானது. விலை மதிப்புமிக்க பொருள்களை கோயில் வளாகத்தில் வைத்துதான் பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டும் என்று ஏற்கெனவே கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், கவசங்களை சென்னைக்கு கொண்டு சென்றது விதியை மீறும் செயல் என ஐகோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது.

சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்
சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்

சிறப்பு விசாரணை குழு

இதையடுத்து சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்ட தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையானது.

அதுமட்டுமல்லாது விஜய் மல்லையா 1999-ம் ஆண்டு ஏற்கெனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஐகோர்ட்.

தங்கம் மோசடி

விசாரணையில் தங்க கவசம் மட்டுமல்லாது கருவறை வாசலில் தங்கம் பதிக்கப்பட்டதிலும் மோசடி நடந்ததாகத் தெரியவந்தது. 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில் தங்கம் பதித்ததிலும் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மோசடிகளிலும் வெவ்வேறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உண்ணிகிருஷ்ணன் போற்றியின் பெயர் முதல் இடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

உண்ணிகிருஷ்ணன் போற்றி
உண்ணிகிருஷ்ணன் போற்றி

மேலும், சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, முன்னாள் திருவாபரண கமிஷனர்கள் பைஜூ, ராதாகிருஷ்ணன், முன்னாள் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர்கள் சுதிஷ்குமார், ராஜேந்திரபிரசாத், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் சுனில்குமார், முன்னாள் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர்கள் ஸ்ரீகுமார், ராஜேந்திரன் நாயர் ஆகியோர் மீது திருட்டு, கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது

குற்றச்சாட்டில் 8வது இடத்தில் அன்றைய சபரிமலை நிர்வாகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் 474.9 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கம் மோசடி; உன்னிகிருஷ்ணன் போற்றி கைது
கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போற்றி

இந்த நிலையில் உண்ணிகிருஷ்ணன் போற்றியை கிளிமானூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று காலை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு அவரை கைது செய்தனர்.

இன்று அவரை ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், தொடர் விசாரணைக்காக அவரை சிறப்பு விசாரணைக்குழு போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக மனு அளிக்க உள்ளனர்.

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?

கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார... மேலும் பார்க்க

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உ... மேலும் பார்க்க

`ரூ.8 லட்சம்' கேட்ட DIG வீட்டில், ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் பறிமுதல் - CBI அதிரடி

பஞ்சாப் டி.ஐ.ஜி ஹர்சரன் சிங்பஞ்சாப்பில் உள்ள ரோபர் மண்டலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பவர் ஹர்சரன் சிங். இவர் பதேகர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார... மேலும் பார்க்க

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க