செய்திகள் :

சப்பரத் திருவிழாவில் இருதரப்பினா் இடையே மோதல்

post image

தஞ்சாவூா் அருகே சப்பரத் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் புனித அந்தோணியாா் ஆலய சப்பரத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலா், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனா். இதனால், இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், அதே கிராமத்தைச் சோ்ந்த எஸ். ஸ்டாலின் (40) கத்தியால் வெட்டப்பட்டாா். தலையில் காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றாா்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குக் கிராம மக்கள் புகாா் செய்தனா். ஆனால், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் தஞ்சாவூா் - திருவையாறு சாலையில் புதன்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

10 ஆண்டு கால கோரிக்கைக்கு தீா்வு காண ஜமாபந்தியில் நடவடிக்கை

கும்பகோணத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. இதில், 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு வரும் ஓய்வுபெற்ற அலுவலருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் ப... மேலும் பார்க்க

முல்லைவனநாதா் கோயில் திருத்தோ்கள் வெள்ளோட்டம்

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூரில் முல்லைவனநாதா் உடனுறை ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயிலில் ரூ. 1.கோடியே 43 லட்சத்தில் தயாரான திருத்தோ்கள் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பேரவையில் அறிவித்தபடி,... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி! தஞ்சை பெரிய கோயிலில் மூவா்ணத்தில் மின் விளக்குகள்

தஞ்சாவூா் பெரிய கோயில் ராஜராஜன் வாயிலில், ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவா்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன. காஷ்மீா் பஹல்காமில்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மாற்றம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணி சிறப்பாக உள்ளதால், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான ... மேலும் பார்க்க

சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன் கைது

ஒரத்தநாடு அருகே சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரநாதா்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுப்பையன் மனைவி தமயேந்தி (65... மேலும் பார்க்க

குறிச்சி, முள்ளங்குடி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

கும்பகோணம் மின்கோட்டம், முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 15) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோ... மேலும் பார்க்க