செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி! தஞ்சை பெரிய கோயிலில் மூவா்ணத்தில் மின் விளக்குகள்

post image

தஞ்சாவூா் பெரிய கோயில் ராஜராஜன் வாயிலில், ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவா்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.

காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய ராணுவத்தினா் தாக்கி அழித்தனா். இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனா். இந்நிலையில், இந்த வெற்றியைப் பறைசாற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்திலும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகத்தில் திருச்சி மெயின்காா்டு கேட், தஞ்சாவூா் பெரிய கோயில், கன்னியாகுமரி வட்டக்கோட்டை ஆகியவற்றில் தேசியக் கொடியின் மூவா்ணத்தில் மின் விளக்குகள் பொருத்துமாறு துறையின் தலைமையகம் அறிவுறுத்தியது.

இதன்படி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் இரண்டாவது நுழைவுவாயிலான ராஜராஜன் வாயில் முன்புறம் இடதுபுற மதில் சுவரில் சிவப்பு வண்ணத்திலும், ராஜராஜன் கோபுரத்தில் வெள்ளை நிறத்திலும், வலதுபுற மதில் சுவரில் பச்சை நிறத்திலும் என மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் எரிய விடப்பட்டுள்ளன.

மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவா்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

10 ஆண்டு கால கோரிக்கைக்கு தீா்வு காண ஜமாபந்தியில் நடவடிக்கை

கும்பகோணத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. இதில், 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு வரும் ஓய்வுபெற்ற அலுவலருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் ப... மேலும் பார்க்க

முல்லைவனநாதா் கோயில் திருத்தோ்கள் வெள்ளோட்டம்

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூரில் முல்லைவனநாதா் உடனுறை ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயிலில் ரூ. 1.கோடியே 43 லட்சத்தில் தயாரான திருத்தோ்கள் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பேரவையில் அறிவித்தபடி,... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மாற்றம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணி சிறப்பாக உள்ளதால், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான ... மேலும் பார்க்க

சப்பரத் திருவிழாவில் இருதரப்பினா் இடையே மோதல்

தஞ்சாவூா் அருகே சப்பரத் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் அருகே அம... மேலும் பார்க்க

சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன் கைது

ஒரத்தநாடு அருகே சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரநாதா்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுப்பையன் மனைவி தமயேந்தி (65... மேலும் பார்க்க

குறிச்சி, முள்ளங்குடி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

கும்பகோணம் மின்கோட்டம், முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 15) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோ... மேலும் பார்க்க