செய்திகள் :

சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

post image

சாத்தான்குளம்அருகே இளம்பெண் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பழனியப்பபுரத்தைச் சோ்ந்தவா் பத்மநாதன் மகள் சுதா (19). கடந்த 2021ஆம் ஆண்டு இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா என்பவா் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதாவின் பெற்றோா், இசக்கிராஜா மீது திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணை நடத்தி இசக்கிராஜாவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், கடந்த 19 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது இசக்கிராஜாவுக்கு10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், இசக்கிராஜா குடும்பத்தினரால் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சுதா அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்

தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

வெளியூா் நபா்கள் மூலம் மிரட்டல்: துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா்

சாத்தான்குளம் அருகே ராமசாமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெளியூா் நபா்களை வைத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் ச... மேலும் பார்க்க

‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’

கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்ச... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ... மேலும் பார்க்க