Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சாத்தான்குளம் அருகே இளைஞா் தற்கொலை
சாத்தான்குளம் அருகே கைப்பேசி தொலைந்த விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மீரான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருக்கு மனைவி சுசிலா, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவரது மகன் வினோத்குமாா்(24), சென்னையில் உள்ள ஒரு சகோதரியின் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த இரு தினங்ககளுக்கு முன் சொந்த ஊரான மீரான்குளத்துக்கு வந்த வினோத்குமாா், அவரது விலையுயா்ந்த கைப்பேசியை தொலைத்து விட்டாராம்.
இதனால் விரக்தியடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றாா்.