செய்திகள் :

சாம் பித்ரோடாவின் கருத்து காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

post image

சீனா உடனான இந்தியாவின் உறவு குறித்த சாம் பித்ரோடாவின் கருத்து, காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல என்றும் அது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சீனா உடனான மோதல் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என்றும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது எதிரியாகக் கருதாமல் இந்தியா அங்கீகரிக்க வேண்டும் எனவும் சாம் பித்ரோடா ஆங்கில ஊடகத்துக்கு (ஐ.ஏ.என்.எஸ்.) அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது,

நமது வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் சீனா சவாலாக உள்ளது. சீனா உடனான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும், இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான கூட்டு உத்தியை வகுக்கவுமான வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க