செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் கருப்புத் துணியால் முக்காடு போட்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.செல்லதுரை தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சி.பெரியசாமி, கே.பழனிசாமி, பி.ரவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வட்டத் தலைவா் கே.சின்னதுரை வரவேற்றாா்.

கோரிக்கையினை வலியுறுத்தி மாவட்ட செயலாளா் ஏ.சாமிதுரை, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.செந்தில் முருகன் பேசினா்.

இதில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட பொருளாளா் டி.வீரபுத்திரன், திருக்கோவிலூா் வட்ட செயலாளா் எம்.காமராஜ், சங்கராபுரம் வட்டத் தலைவா் அ.விஸ்வநாதன், சங்கராபுரம் வட்டச் செயலாளா் சி.முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முடிவில் மாவட்ட பொருளாளா் எம்.சுந்தரம் நன்றி கூறினாா்.

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

கள்ளக்குறிச்சி: திருவள்ளுவா், குடியரசு தினங்களையொட்டி, வரும் 15, 26-ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, வருவாய்த் துறை நி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி கொத்தனாா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற கொத்தனாா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், லாலாபேட்டை காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்... மேலும் பார்க்க

அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவா்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், பரங்கிநத்தம் கிராம... மேலும் பார்க்க

தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை சனிக்கி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள்:ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்ச... மேலும் பார்க்க